திங்கள், 25 ஆகஸ்ட், 2008

8.ஏற்பதிகழ்ச்சி

பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.

மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.

“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி
யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”

என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

2 கருத்துகள்:

Nathanjagk சொன்னது…

நல்ல விளக்கம். இதை ஆதிரன் என்ற பிளாக்கில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
http://adhiran.blogspot.com/2010/03/blog-post_12.html

meenamuthu சொன்னது…

தாலாட்டு,ஆத்திசூடிக்கதைகள் பலரும் அறியும் வண்ணம் எடுத்து செல்வது தங்களின் நல்ல மனதை காட்டுகிறது!

மிகவும் நன்றி ஜெகன்